×

பாம்பு கடித்து சிறுவன் பலி

பாபநாசம், ஜன. 1: பாபநாசம் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலியானான். அரியலூர் மாவட்டம் குணமங்கலத்தை சேர்ந்தவர் பழனி. கொத்தனார். இவர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பாலக்கரையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மகன் பரமசிவம் (12). மாணவன். கடந்த 29ம் தேதி பழனி, மகன் பரமசிவத்தோடு உம்பளாப்பாடியிலுள்ள சகோதரி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கபிஸ்தலம் விறகு கடை அருகில் சென்றபோது பரமசிவத்தை பாம்பு கடித்தது. இதையடுத்து ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்